Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி பகுதியில் சில பெட்டிக்கடைகளிலும், டீக்கடைகளிலும் அரசு மதுபான வகைகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஆறுமுகநேரி வடக்கு பஜாரில் உள்ள ராமஜெயம் (52) என்பவரது மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையில் 14 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் ராமஜெயத்தை கைது செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.